தலைவலி நீங்க முத்திரை (அருமையான நோய்தீர்க்கும் தூண்டல் முறை )

முத்திரை செய்தால் நல்ல நித்திரை கிடைக்கும். உடல் எங்கும் உள்ள வியாதிகள் பறக்கும். இது சாத்தியமே. செய்து பார்த்தால் பலன் கிடைக்கும். இதை நம் முன்னோர்கள் அனுபவித்து நமக்கு விட்டு சென்றுள்ளார்கள். எனவே முத்திரை என்பது விரல் மற்றும் நரம்புகளுக்கான பயிற்சி மட்டுமல்ல. அது ஒரு உயிர்காக்கும் உடல் மந்திரம். அதனால்தான் உலகம் முழுவதும் இந்த முத்திரைகளை செய்து வருகின்றனர். விரல்களை குறிப்பிட்ட விரலுடன் ஒன்றிணைத்து குறிப்பிட்ட திசையில் மற்ற விரல்களை நீட்டி செய்யும் முறையாகும். பாரப்பதற்கு ஒன்மில்லாமல் இருப்பதைப் போல தோன்றினாலும், அதன் பலன்கள் ஏராளம்.

முத்திரைகள் தீர்க்கம் நோய்கள்: 


முத்திரைகள் தலைவலி மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் எல்லா உபாதைகளுக்கும் தீர்க்கும் ஒரு அருமையான விரல் மந்திரம் எனலாம். விரல்களை நீட்டி மடக்குவதன் மூலம் நரம்புகள் தூண்டப்பட்டு, குறிப்பிட்ட உடலுறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகள் மூலம் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, சேதமடைந்த செல்கள் மற்றும் தேங்கியிருக்கும் இரத்தத்தை மற்ற பகுதிகளுக்கு அனுப்பி, இதயம் மூலம் கெட்ட இரத்த த்தை தூய்மைப்படுத்தும் பணிக்கு அனுப்பும் வேலைகளை செய்கிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு பகுதிகளுக்கும், அதில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு உண்டு. நம் முன்னோர்கள் அதை 1000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து, உடலில் எந்தப் பகுதியை தூண்டினால் எந்த உறுப்பு செயல்படும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் எப்படி மிக எளிதாக இயற்கை முறையில் உடலை வைத்தே தீர்ப்பது என்பது ஆய்ந்தறிந்து நமக்கு அவர்கள் வழங்கிய அருட்கொடைதான் "முத்திரை".

உடலுறுப்புகளின் ஒவ்வொரு உபாதைகளுக்கும் தீர்வு கொடுத்து, இயற்கையான முறையில் முன்பு உள்ளது போலவே உடலை வைத்துக்கொள்ள அவைகள் உதவின. முத்திரைகள் பல உண்டு. அவற்றில் நாம் இங்கு கற்றுக்கொள்ளப் போவது "தீராத தலைவலி" நீக்கும் யோக முத்திரையைப் பற்றித்தான்.

தீராத தலைவலி நீங்க மருந்து மாத்திரைகள் எடுத்து பட்ட அவஸ்தைக்கெல்லாம் நிரந்தர தீர்வு கிடைக்காமல் சிலர் அல்லல் உறுவர். அவ்வாறானவர்களுக்கு ஒரு நோய் நீக்கி முறையாக இந்த முத்திரைப் பிடித்தல் பயன் அளிக்கிறது. இது ஒரு  சிறந்த நிவாரண முறையாக இருப்பது ஆச்சர்யமளிக்கிறது. குறிப்பிட்ட உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளைத் தூண்டுவதன் மூலம் அந்த உறுப்புகளில் உள்ள நோயை நிரந்தரமாக விரட்ட முடியும்.

யோக முத்திரை செய்யும்முன் கவனிக்க வேண்டியவை: 


நன்றாக தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். கழுத்து, தலை நேராக ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு முதுகுத் தண்டை வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முத்திரைக்கும் இந்த உடல் பொசிசன் வழியை கடைபிடிக்க வேண்டும்.

mahasiras muthrai


ஐம்புலன்களை குறிக்கும் ஐந்து விரல்கள் நம் உடலில் உள்ள எந்த வகையான நோய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவைதான். அவற்றை முறையான முத்திரைப்பிடித்தல் வழியின் மூலமாக விரட்டவிடலாம். வீட்டிலிருந்தபடி அந்த யோக முத்திரைகளைப் பிடிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். அபானவாயு முத்திரைப் பிடிப்பதன் மூலம் தீராத தலைவலியை தீர்த்துக்கொள்ள முடியும்.


abana vayu muthirai
அபான வாயு முத்திரை
அபானவாயு முத்திரை செய்வது எப்படி?

1. முதலில் ஆள்காட்டி விரலை மடக்கி பெரு விரலின் (கட்டைவிரல்) அடியைத்தொட வேண்டும். பிறகு ஆட்காட்டி விரல், நடுவிரல் இவ்விரண்டினையும் கட்டை விரலின் நுனியைத் தொடுமாறு வைக்க வேண்டும். இறுதியில் சுண்டு விரலை நன்றாக நீட்ட வேண்டும்.


இந்த முத்திரைக்கு மிருத்த சஞ்சீவினி முத்திரை என்ற பெயரும் உண்டு. இது இதயத்தை பலமாக்குவதால் இதற்கு இதய முத்திரை என்ற பெயரும் உண்டு. தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வர இதயநோய், தலைவலி போன்றவை இல்லாமல் மறைந்து போய்விடும்.


கடினமான தலைவலி யை போக்கும் பட்சி முத்திரை 



அபானவாயு முத்திரைப் போலவே பட்சி முத்திரையும் தலைவலியை போக்கும் தன்மை கொண்ட முத்திரை ஆகும். இந்த முத்திரை செய்வது மிக எளிதுதான்.

patchi mudra


ஆள்காட்டி விரலை சிறிது மடக்கி, பெருவிரல் நுனியோடு இணைக்கவும். மற்ற மூன்று விரல்களையும் ஒன்றாக உள்ளங்கையில் சேருமாறு மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த முத்திரையை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். இந்த முத்திரை தலைவலி நீக்கும் அருமையான முத்திரை ஆகும். செய்து பாருங்கள் உங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும்.

தலைவலி போக்கும் "மஹாசிரஸ் முத்திரை"


படத்தில் உள்ளதுபோல் இரு கைகளிலுள்ள ஆட்காட்டி மற்றும் நடுவிரல்கள், உங்கள் கட்டை விரல்களை மிருதுவான அழுத்தத்துடன் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் மோதிர விரலை கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளதைப்போல உள்ளங்கைக்குள் மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சுண்டு விரல் வெளிப்புறமாக நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். இரு கைகளிலிலும் இதுபோன்று வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த “மஹாசிரஸ்” முத்திரையை ஒரு நாளைக்கு 10 லிருந்து 15 நிமிடங்கள் வரைச் செய்ய வேண்டும்.

mahasiras muthrai


தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வர உடல் ஆரோக்கியம் பெறும். தலைவலி இருந்த இடம் தெரியாமல் மறையும். உடலில் உள்ள வலிகள் பறந்தோடி உடல் முழுவதும் காற்று போல இலேசாகும்.

நரம்புகளில் ஏற்படும் தளர்ச்சி சீர்பட்டு, இரத்த ஓட்டம் சீராக உடலை சுற்றி வரும். நோய்கள் என்பதே உடலை அண்டாது.





Post a Comment

0 Comments